புருஷோத்தம யோகம்
1-5
மேலும்கண்ணன் கூறினார் ஐயம்விலக விளக்கினார்
வேதம்தன்னை விரிந்தஓர் பெரியஆல விருட்சமாய்
அறியும்ஒருவன் வேதத்தை அறியும்-ஒருவன் ஆகிறான்
அந்தஆல மரம்தனில் இலைகள்வேதப் பதங்களாம்
வேர்கள்வானை நோக்குமாம் கிளைகள்கீழே நோக்குமாம்
மாயஉலகின் முக்குணம் இதனைவளர்க்கும் உரமுமாம்
சிறியகிளைகள் புலன்களாம் வேர்கள்-செயலின் பலன்களில்
பிணைத்ததான அமைப்புமாம் விரிந்துபரந்த வளர்ச்சியால்
மேலும்கீழும் நிறையுமாம் மாயஉலகைப் பிணைக்குமாம்
சிறியகிளைகள் புலன்களாம் வேர்கள்-செயலின் பலன்களில்
பிணைத்ததான அமைப்புமாம் விரிந்துபரந்த வளர்ச்சியால்
மேலும்கீழும் நிறையுமாம் மாயஉலகைப் பிணைக்குமாம்
இம்மரத்தின் உண்மையை உலகமாயை கொண்டுநீ
அறிதல்அரிது அரிதுமாம் முடிந்திடாத விஷயமாம்
எங்குஇதனின் தொடக்கமாம் எங்குமுடியும் அதுவுமாம்
எதனில்தங்கித் தொடங்குமாம் என்பதெல்லாம் புதிருமாம்
பற்றிலாத பற்றுமாம் முடிந்திடாத முழுதுமாம்
சாற்றுமொரு சத்தமின்றி சார்ந்திருக்க ஏதுவாகும்
முழுமைகொண்ட இறைவன்பாதம் சரண்புகவே விளங்குமாம்
போலிகெளர வம்தனை மயக்கம்போலி உறவினை
துறந்துசத்ய நித்திய தோற்றம்தன்னைப் புரிந்துமே
ஜடஉலகின் ஆசையை தோன்றும்இன்ப துன்பினை
துறந்து பரமபுருஷனை அடையும்வழியை அறிந்தவன்
பரமபதத்தை அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்
அறிதல்அரிது அரிதுமாம் முடிந்திடாத விஷயமாம்
எங்குஇதனின் தொடக்கமாம் எங்குமுடியும் அதுவுமாம்
எதனில்தங்கித் தொடங்குமாம் என்பதெல்லாம் புதிருமாம்
பற்றிலாத பற்றுமாம் முடிந்திடாத முழுதுமாம்
சாற்றுமொரு சத்தமின்றி சார்ந்திருக்க ஏதுவாகும்
முழுமைகொண்ட இறைவன்பாதம் சரண்புகவே விளங்குமாம்
போலிகெளர வம்தனை மயக்கம்போலி உறவினை
துறந்துசத்ய நித்திய தோற்றம்தன்னைப் புரிந்துமே
ஜடஉலகின் ஆசையை தோன்றும்இன்ப துன்பினை
துறந்து பரமபுருஷனை அடையும்வழியை அறிந்தவன்
பரமபதத்தை அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்
6-10
எனதுபரம பதம்எனும் தலத்தை-அடைதல் அரியது
சூரியனால் சந்திரனால் ஒளிர்படாமல் ஸ்வயம்ப்ரகாசம்
ஆனஅதனை முயன்றுமே சென்றடைந்த ஞானியர்
உலகில்-மீண்டும் பிறந்திடார் மாயப்பிடியில் அகப்படார்
இந்தமாய உலகிலே வந்தஎவரும் என்திரு அம்சமேதான்-ஆனவர்
எனினும் மாயக்கட்டினால் புலனில்வீழ்ந்த தாயினர்
எனினும் மாயக்கட்டினால் புலனில்வீழ்ந்த தாயினர்
காற்றுமணத்தை சுமக்குது அங்குமெங்கும் பரப்புது
மாற்றமில்லா ஆத்துமமும் அதுபோல்தானே இருக்குது
உடலை விட்டு வேறுடல் உணர்வைக் கொண்டு செல்லுது
ஜடமுமான உலகில்உயிர் வழியாய்த் தானாகுது
மாற்றமில்லா ஆத்துமமும் அதுபோல்தானே இருக்குது
உடலை விட்டு வேறுடல் உணர்வைக் கொண்டு செல்லுது
ஜடமுமான உலகில்உயிர் வழியாய்த் தானாகுது
மனதைச்சுற்றி அமைதலாக புலனைஅடைந்து வாழுது
ஆன்மம்உடலை நீங்கலோ வேறுடலைக் கொள்ளலோ
மனஉணர்வில் சிக்கிய மாந்தருக்குப் புரிவது
அரிதுமிகவும் அரியது அறிவதென்ப தரியது
துரியநிலையில் ஞானம்கண்ட ஞானியர்க்கே உரியது
மனஉணர்வில் சிக்கிய மாந்தருக்குப் புரிவது
அரிதுமிகவும் அரியது அறிவதென்ப தரியது
துரியநிலையில் ஞானம்கண்ட ஞானியர்க்கே உரியது
11
ஆன்மஉணர்வில் நிலைத்துநல் முயற்சிகொள்ளும் சாதகன்
நன்கு-கண்டு தெளிகிறான் நடப்பதனைப் புரிகிறான்
ஆன்மஉணர்வு அற்றவர் உலகப்பற்று உற்றவர்
என்னமுயன்றும் அறிகிலர் உண்மைதன்னை உணர்ந்திலர்
12-13
உலகம்-முழுதும் இருள்தனை விலக்கும்-ஆத வன்ஒளி
சந்திரனும் நெருப்புமே கொண்டு-திகழும் நல்லொளி
என்னிடமே தோன்றுது என்னால்-தானே ஒளிருது
அண்ட-கிரகம் யாவிலும் நானே-நுழைந்து இருக்கிறேன்
கொண்டஎனது சக்தியால் அவற்றைச்சுழல வைக்கிறேன்
சந்திரனாய்த் தோன்றி-நான் உலகத்தாவ ரம்தனில்
உயிர்கொடுத்துக் காக்கிறேன் வாழ்வுரஸமு மாகிறேன்
உலகம்-முழுதும் இருள்தனை விலக்கும்-ஆத வன்ஒளி
சந்திரனும் நெருப்புமே கொண்டு-திகழும் நல்லொளி
என்னிடமே தோன்றுது என்னால்-தானே ஒளிருது
அண்ட-கிரகம் யாவிலும் நானே-நுழைந்து இருக்கிறேன்
கொண்டஎனது சக்தியால் அவற்றைச்சுழல வைக்கிறேன்
சந்திரனாய்த் தோன்றி-நான் உலகத்தாவ ரம்தனில்
உயிர்கொடுத்துக் காக்கிறேன் வாழ்வுரஸமு மாகிறேன்
14
வாழும்உயிர்ஒவ்..வொன்றிலும் செரிக்கச்செய்யும் நெருப்பு-நான்
இழுக்கும்-விடும் ஸ்வாசம்-நான் இவைகள்-கொண்டு உயிரின்-உடலில்
உண்டஉணவு அனைத்தையும் செரிக்கச்செய்யும் சக்திநான்
வாழும்உயிர்ஒவ்..வொன்றிலும் செரிக்கச்செய்யும் நெருப்பு-நான்
இழுக்கும்-விடும் ஸ்வாசம்-நான் இவைகள்-கொண்டு உயிரின்-உடலில்
உண்டஉணவு அனைத்தையும் செரிக்கச்செய்யும் சக்திநான்
15
அனைவரது இதயத்திலும் இருக்கும் சக்தி ஆனவன்
என்னிலிருந்து-ஞாபக சக்தி-மற்றும்-மறதியும் வருவவென்று அறிவநீ
வேதகோஷம் நானேவேத அந்தம்-செய்த சத்யம்நான்
வேதம் தன்னை முற்றுணர்ந்த வேதம் தன்னிின் மூலம்நான்
அனைவரது இதயத்திலும் இருக்கும் சக்தி ஆனவன்
என்னிலிருந்து-ஞாபக சக்தி-மற்றும்-மறதியும் வருவவென்று அறிவநீ
வேதகோஷம் நானேவேத அந்தம்-செய்த சத்யம்நான்
வேதம் தன்னை முற்றுணர்ந்த வேதம் தன்னிின் மூலம்நான்
16-20
உயிரில்இரண்டு வகைகளாம் ஒன்றுஇழியும் அழியுமாம்
மற்றும்ஒன்று நிற்குமாம் ஜடஉலகைப் பற்றிவாழும்
உயிர்கள்இழியும் அழியுமாம் ஆன்மநெறியைப் பூண்டுஆன்ம
உலகில் வாழ்வர் நிற்பரே இழிவிலாமல் சிறப்பரே
உயிரில்இரண்டு வகைகளாம் ஒன்றுஇழியும் அழியுமாம்
மற்றும்ஒன்று நிற்குமாம் ஜடஉலகைப் பற்றிவாழும்
உயிர்கள்இழியும் அழியுமாம் ஆன்மநெறியைப் பூண்டுஆன்ம
உலகில் வாழ்வர் நிற்பரே இழிவிலாமல் சிறப்பரே
இந்தஇரண்டு வகையினர் தன்னைக்கடந்து இருப்பவர்
இந்தஇரண்டு உலகிலும் நுழைந்துஅதனைக் காப்பவர்
இறைவன்என்றே ஆனவர் சிறந்தபுருஷன் ஆம்அவர்
எவரும்அவரைப் படைத்திடாமல் தாமேஇருக்கும் படியவர்
இந்தஇரண்டு உலகிலும் நுழைந்துஅதனைக் காப்பவர்
இறைவன்என்றே ஆனவர் சிறந்தபுருஷன் ஆம்அவர்
எவரும்அவரைப் படைத்திடாமல் தாமேஇருக்கும் படியவர்
மனிதஇனத்தை உயிரைக்கடந்து மண்கடந்து விண்கடந்து
எதுவும்கடந்து சிறந்ததால் உன்னதமாய் ஆனதால்
யாவுமான தாதலால் வேதம்மற்றும் உலகம்என்னை
சிறந்தபுருஷ உத்தம..னாகப்-போற்றி ஏத்துது
எதுவும்கடந்து சிறந்ததால் உன்னதமாய் ஆனதால்
யாவுமான தாதலால் வேதம்மற்றும் உலகம்என்னை
சிறந்தபுருஷ உத்தம..னாகப்-போற்றி ஏத்துது
எவன்எனினும் ஐயமின்றி என்னைக்கடவுள் ஆகவே
தெரிந்துகொள்ள லாயின்அவன் யாதும்அறிந்த அறிஞனாய்
ஞானம்முதிர்ந்த ஒருவனாய் முழுமையான இறையின்தொண்டில்
ஈடுபாடு கொள்கிறான் அன்புசேவை செய்கிறான்
தெரிந்துகொள்ள லாயின்அவன் யாதும்அறிந்த அறிஞனாய்
ஞானம்முதிர்ந்த ஒருவனாய் முழுமையான இறையின்தொண்டில்
ஈடுபாடு கொள்கிறான் அன்புசேவை செய்கிறான்
பாவமற்ற பாரதா வேகமுற்ற ஓர்ரதா
வேதம்தன்னின் ரகசியம் ஆனஇதனை உனக்குநான்
வெளிப்படவே கூறினேன் ஒளிபெறவே சாற்றினேன்
இதனைஅறிந்த எவனுமே பக்குவத்தைஅடைகிறான் ஞானியாகஆகிறான்
வேதம்தன்னின் ரகசியம் ஆனஇதனை உனக்குநான்
வெளிப்படவே கூறினேன் ஒளிபெறவே சாற்றினேன்
இதனைஅறிந்த எவனுமே பக்குவத்தைஅடைகிறான் ஞானியாகஆகிறான்
--------------
No comments:
Post a Comment