Sunday, April 19, 2015

அத்தியாயம் 13 - க்ஷேத்ர க்ஷேத்ரஞ்ய விபாக யோகம்





இயற்கையும்,அனுபவிப்பவனும்,உணர்வும்
1,2
அறியும்ஆவல் கொண்டுமே பார்த்தன்மேலும் கூறினான்
இயற்கை தன்னைத் துய்ப்பவன் களம்-களத்தை அறிபவன்
ஞானம்மற்றும் அதனின்-முடிவு பற்றிஅறிய விழைகிறேன்
“மனித-உடல் களமடா அதனை-அறிந்த எவனுமே
களத்தை-அறிந்த ஒருவனாம்” என்றுகண்ணன் கூறினான்
3
அனைத்து-உடலின் உள்ளிலும் அறியும்-ஒருவன் நானடா
உடலின்-உரிமை யாளனை மற்றும்உடலை நன்குற
புரிந்துகொள்வ தென்பது ஞானம்-என்றே ஆகுது
அறிந்துகொள்நீ பாரதா குந்திமைந்த சோதரா 
4
செயல்நடக்கும் செயற்களம் அதனில்தோன்றும் அமர்க்களம்
அதனைஅறியும் பிறவியும் அவனின்-உயர்ந்த க்யாதியும்
என்னவென்று சுருக்கமாய் சொல்லுவேன்கேள் பாரதா
5
இவைகள்பற்றி அறிவினை சிறந்தமுனி புங்கவர்
வேதநூல்கள் மூலமாய் விவரம்செய்து உள்ளனர்
*மூலம்மற்றும் விளைவினை ஆய்வுசெய்து உள்ளனர்
*காரணம்
6-7
ஐந்துபெரும் மூலங்கள் அஹங் காரம்அறிவுஐம்புலன்
விஷயம்-மற்றும் தோன்றிடாத் தன்மையான விஷயமும்
*பத்துபுலன் மனதுடன் விருப்புவெறுப்பு இன்பமும்
துன்பம்மற்றும் நம்பிக்கை மொத்தஉயிர் அறிகுறி
இவைகள்-எல்லாம் செயற்களம் மற்றும்-அதனின் விளைவுமே         

*கண்,காது,நாசி,தோல்,நாக்கு,வாய்,கை,கால்,பிறப்புறுப்பு,மலத்வாரம்  

6-8-12
அடக்கம்-கர்வ மின்மையும் அஹிம்சை-பொறுமை எளிமையும்
ஆன்ம-குருவின் அணுக்கமும் தூய்மை-புலனில் துறவுடன்
பொய்-அஹங்கார மின்மையும் பிறப்பு-இறப்பு மூப்புடன்
பிணியின்-தன்மை உணரலும் மனைவி-மைந்தர் இல்லமும்
பிறரைச் சார்ந்த நினைவையும் துறந்து-இன்ப துன்பத்தை
சமதையாக எண்ணியே என்னில்பக்தி பூண்டுமே
தனிமைதன்னை நாடியே ஆன்மஉணர்வை ஏற்றுமே
பரமதத்வ ஆய்வுடன் இருத்தல்-ஞானம் என்கிறேன்
இவற்றின்-எதிரி ஞானமற்ற அக்ஞானமே அறிந்திடு
13
எதைஅறிதல் உசிதமோ எதனில்-நித்யம் இருக்குமோ
அதனைச்-சொல்வேன் பார்த்தனே கேளுதர்ம அனுஜனே
எனக்குப்-பணிந்து இருப்பது துவக்கம்என்ப..தற்றது
ப்ரம்மம்-என்றும் ஆன்மம்-என்றும் ஜடத்தைக்கடந்து நிற்பது 
14
எதிலும்நிறைந்து இருப்பவர் கரமும்-தாளும்  கண்ணும்-முகமும்
எங்குமாக இருப்பவர் எதையும் பார்க்கும் திறத்தவர்
எதையும்-கடந்த ஓசையாய்   எதையும்கேட்டு இருக்கிறார்
அவரை-ப்ரம்மம் என்கிறார் பரமஆன்மம் ஆகிறார்
15
புலனின்-மூல காரணர் புலனிலாத பூரணர்
உயிரைக்-காத்து நிற்பவர் எதையும்-துறந்து கடப்பவர்
மாய ஜடத்தில் பிறந்த-உலகின் குணங்கள்-தனக்கு
தூயஇறைவ..னாகிறார் பாயும்மனதி..லாதராய்
16
கிடந்தசைந்..திருப்பவர் அனைத்தினுள்ளு..மேயவர்
ஜடப்புலனின் வலிமையினால் காணவொண்ணா அறியவொண்ணா
ஒருத்தராக இருப்பவர் இறைவன்-என்னும் பெயரவர்
தொலைவில்-அவர் இருப்பினும் அருகிருக்கும் அருளவர்
17
பிரிந்திருக்கு மாறுதோற்றம் கொண்டிருப்ப ராயினும்
பிரிவுஎன்று ஒன்றிலாது சேர்ந்திடுக்கு மாண்டவர்
உயிர்கள்தன்னைப் படைத்துக்காத்து முடிவிலதனை முடித்துவைக்கும்
முடிவிலாத முடிவவர் புரிந்துகொள்ள அரியவர்
18
ஜொலித்திருக்கும் ஒளியவர் அதற்கும்மூல மேயவர்
இருண்டஜடத்தைக் கடந்தவர் எளிதில்தோன்றா படியவர்
ஞானமாக இருக்குமவரே ஞானக்கருவும் ஆகிறார்
ஞானஇலக்கு மாகஅவர் இதயமமர்ந் திருக்கிறார்

19
இவ்வாறாகச் சுருக்கமாய் களமும்மற்றும் ஞானமும்
அறியத்தக்க விஷயமும் என்னால் சொல்லப்பட்டன
இவற்றின்உண்மை தன்னைநீ உணருநன்கு அருச்சுனா
எனதுபக்தர் மட்டுமே என்னைஅடைவர் அறிந்திடு 
20
ஜடஇயற்கை மற்றும்அதனில் வாழும்உயிர்கள் யாவையும்
ஆதியற்ற தானவாம் இதனைநன்கு புரிந்திட வேண்டும்வேண்டும்வேண்டுமாம்
வாழும்உயிரின் மாற்றங்கள் ஜடப்பொருளின் தன்மைகள்
ஆனயாவும் இயற்கையின் உற்பத்தியால் விளைந்ததே
21
ஜடச்செயல்கள் விளைவுகள் ஆனவற்றின் காரணம்
இயற்கைஎன்றே ஆகுது எனினும்உலகில் பல்வித
இன்பதுன்பம் யாவுக்கும் வாழுகின்ற உயிர்களே
காரணமாய் ஆகுது வேறெதுவும் அல்லது
22
உலகஉயிர்கள் யாவும்முக் குணங்கள்தன்னைக் கொண்டுமே
வாழ்ந்திருக்க லாவன வழிநடந்து செல்வன
இயற்கைதன்னின் தொடர்பினால் இப்படியாய் ஆயின
இவழியில் அவைகளும் இன்பதுன்பம் அடைவன       
23
உடலின்உள்ளு றைபவர் தெய்வத்தன்மை உடையவர்
அவர்தான்இறைவன் என்பவர் அவரேஒவ்வொரு உயிரினுக்கும்
பரமஉரிமை கொண்டவர் அவற்றைக்கணமும் திறமையாய்க்
கண்காணிக்கும் தலையவர் பரமனென்னும் பெயரவர் 

24
ஜடஇயற்கை அதன்குணம் உயிர்வாழி அதன்குணம்
இடைவிளவு யாவையும் அறியும்ஒருவன் சீக்கிரம்
முக்தி அடைதல் நிச்சயம் அந்தஞானம் வந்தவன்
எந்தநிலையின் ஆயினும் மீண்டும்பிறப்பு அற்றவன்
25
பரமதத்வ இறைவனை அறியவெகு அரியதான
அறிவின்அறிவு இறைவனை அடையமார்க்கம் பலவுமாம்
ஞானம்கொண்டு ஞானம்கண்டு அவனைக்கண்டு அடையலாம்
அவனைக்காண பலனைவிட்டு அன்புசேவை செய்யலாம்
26
ஆன்மமார்க்கம் தன்னில்ஞானம் அற்றிருந்தும் ஒருசிலர்
ஞானியான ஒருகுரு இறைவன்ஆன சத்குரு
சொன்னவார்த்தை கேட்டுபக்தி சேவைதன்னை செய்யுவர்
தனதுசிரத்தை ஒன்றினாலே சிரத்தில்ஒளியைக் காணுவர்
27,28
ஆடும்பொருளும் ஆடிடா ஜடமுமான விஷயமும்
களமும்-களத்தை அறிந்தவன் சேர்ந்தகலவை ஆகுமே 
அனைத்து-உயிரின் ஜீவனைத் தொடரும்-பரமன் ஒன்றென
கண்டுமற்றும் ஆத்துமம் அழிவதில்லை என்றுமே
உணர்கின்ற ஒருவனே ஞானிஎன்று ஆகிரான்
பிறரிலிருந்து தனிக்கும்-அவனே காண்பவனும் ஆகிறான்
29,30
உலகிலுள்ள ஒவ்வொரு உயிரினுள்ளும் பரமனைக்
காணும்ஒருவன் சீக்கிரம் இலக்கைஅடைதல் நிச்சயம்
பஞ்சபூதம் ஆனதான உடலேசெயலைச் செய்யுது
துஞ்சுகின்ற ஆன்மம் வெறும் சாட்சியாய்த்தான் நிற்குது
என்றஉண்மை காணும்ஞானி மட்டும் காணல் செய்கிறான்
31
ஜடஉடலின் பன்மையைக் கடந்துயாவும் ஒருமையே
என்றநிலைமை வந்திட பரஉணர்வு வந்திடும்
அந்தஉணர்வு வந்ததும் பரந்தப்ரபஞ்சம் தன்னிலே
இங்கனமாய் நிலையுடன் பிறவும்இருக்கக் காண்கிறான்  
32
நித்தியத்தின் உணர்வினைக் கண்டஒருவன் ஆத்துமா
தெய்வம்-என்றே ஒளிருது நித்தியமாய் அருளுது
ஜடஇயற்கை தன்னையே கடந்திருக்கும் படியது
ஜடத்தின்தொடர்பு இருப்பினும் அதனைக்கடந்து நிற்குது
33
எங்கும்நிறைந் திருப்பினுமா காயமெதிலும் கலந்திடா
திருக்கும்-அதனைப் போலவே உடலில்உறை ஆன்மமும்
உடலினின்று பிரிந்துநல் சாட்சியாக நிற்குது
அதனைக்கலந்து திரிந்திடா திருந்துதனித்து ஒளிருது
34
ஒரேஒரு சூரியன் ஜகம்முழுதும் ஜொலிக்கிறான்
ஒன்றெனினும் ஆத்துமா உடல்முழுதும் ஜொலிக்கிறான்
35
உடலின்அதனின் தலைவனின் தன்மைஅறிந்து உணர்பவன்
பிறவித்தளையைக் கடப்பது எளிதெனவே காண்கிறான்
பரமன்அடி என்றுகூறும் பரமபதத்தை இலக்கென
கொண்டுஅவனும் அடைகிறான் பரமன்என்றே ஆகிறான்

---------------

No comments:

Post a Comment